நெமிலி: நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா நாட்டாண்மைதாரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாட்டின்பேரில் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது.