2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் பாஜக வெற்றியடையாது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் பாஜக வெற்றியடையாது; மக்களும் அதை தான் சொல்கிறார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவின் ஒன்றிய அரசு கலப்படம் நிறைந்து காணப்படுகிறது; பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நாட்டின் மிகப்பெரிய ஊழல். மக்கள் விரோத போக்கால் பாஜக மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டுள்ளது: 2024 மக்களவை தேர்தல் மூலம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாஜக சீரழித்துவிட்டது: மத்திய விசாரணை அமைப்புகளால் எதிர்க்கட்சிகளை பாஜக கட்டுப்படுத்துகிறது எனவும் விமர்சனம் செய்தார்.

Related Stories: