வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இதில் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி, உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் கடந்த 23ம் தேதி அட்டகட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் பயிற்சியுடன் தொடங்கியது. 24ம் தேதி முதல் கள பணிகள் நடைபெற்று வந்தது. தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகள் 8 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றுடன் அதாவது 7 நாட்களில் களப்பணிகள் முடிவடைந்தது.