வேளச்சேரி: தேனாம்பேட்டை, எஸ்.எஸ்.புரம், ராதா நகர், கிரீம்ஸ் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(35) பெயின்டர். இவரது மனைவி சுகந்தி. சுந்தரமூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவரது குடிப்பழக்கத்தால் விரக்தி அடைந்த மனைவி அவரை கண்டித்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, மனைவியை பிரிந்த அவர் பெரும்பாக்கம், எழில் நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நேதாஜி சாலையில் உள்ள மருந்து கடை அருகே தனியாக நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை சுற்றிவளைத்து திடீரென பட்டாக்கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர்.