பெரம்பூர்: வியாசர்பாடியில் கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை எம்கேபி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர், கஞ்சா விற்பதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றிரவு வியாசர்பாடி சர்மா நகர் தொழிற்பட்டை அருகே எம்கேபி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.