நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தேரூர், செண்பகராமன்புதூர், கிருஷ்ணன்கோவில், திங்கள்நகர் உள்பட பல்வேறு இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. பறக்கை பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லை புத்தளம் பகுதியில் அமைந்துள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொடுத்து வந்தனர். இதனால் நேரவிரயம் ஏற்பட்டு வந்தது.எனவே பறக்கையில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.