அண்ணாநகர்: பீகார் மாநிலத்தை சேர்ந்த அரவிந்தாஸ் (34) உள்பட 9 பேர் நேற்றுமுன்தினம் சென்னை சென்ட்ரலில் இருந்து 2 ஆட்டோக்களில் கோயம்பேடு சென்றனர். பின்னர், பேசியபடி ₹500 கொடுத்தனர். ஆனால், கூடுதல் பணம் கேட்டு ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்துள்ளனர். மேலும், தொழிலாளர்களை சரமாரியாக தாக்கி 3 செல்போன்களை பறித்து சென்றனர்.