கூடுதல் கட்டணம் தர மறுத்த தொழிலாளர்களை தாக்கி 3 செல்போன்கள் பறிப்பு: ஆட்டோ டிரைவர்கள் கைது

அண்ணாநகர்: பீகார் மாநிலத்தை சேர்ந்த அரவிந்தாஸ் (34) உள்பட 9 பேர் நேற்றுமுன்தினம் சென்னை சென்ட்ரலில் இருந்து 2 ஆட்டோக்களில் கோயம்பேடு சென்றனர். பின்னர், பேசியபடி ₹500 கொடுத்தனர். ஆனால், கூடுதல் பணம் கேட்டு ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்துள்ளனர். மேலும், தொழிலாளர்களை சரமாரியாக தாக்கி 3 செல்போன்களை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில்  கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரித்தனர். அதில் பதிவான ஆட்டோ பதிவு எண்ணை  வைத்து, சென்னை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கார்த்திகேயன் (27), ரிதீஷ் (25) ஆகியோரை கைது செய்து, ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: