கிரீஸ்: கிரீஸ் நாட்டில் உள்ள கலிதியா நகரில் நடைபெற்ற 12வது சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பாக இந்த போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் கலந்து கொண்டுள்ளார். இவர் கடந்த மாதம் 8.36 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்தவர் ஆவார். போட்டி துவங்கியதும் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஸ்ரீசங்கரைத் தொடர்ந்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தோபியாஸ் மான்ட்லர் 8.27 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும் 8.17 மீட்டர் தாண்டி பிரான்ஸ் வீரர் ஜூல்ஸ் பொம்மெரி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.