மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இலங்கை நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது.மிர்பூரில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 365 ரன் குவித்து ஆல் அவுட்டானது (116.2 ஓவர்). தொடர்ந்து 2வது நாளான நேற்று முன்தினம் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை ஆட்ட நேர முடிவில் 46 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 70*, ரஜிதா (0) இருவரும் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரஜிதா ரன் ஏதும் எடுக்காமலும், கருணரத்னே 80 ரன்னிலும் (155 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.