புதுச்சேரி: புதுச்சேரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறை தலைமைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து ஐஜி சந்திரன் உத்தரவின்பேரில் புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வப்போது பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்ஐ முருகன் தலைமையில் போலீசார், ரயில்வே காவல்துறையினருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.