திருச்சி: நான்குபட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நான்குபட்டியில் முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்கார்ந்து பார்வையிடும் வகையில் மேடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் சோதனை நடத்தினர். இறுதியில் 800 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.