திருச்சி: சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம். கோயில் உண்டியல்கள் மாதம் இருமுறை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும்.