சென்னை: அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் டிமாண்டி காலனி. இந்த படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று படக்குழுவினர் இதனை கொண்டாடினார்.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கப்போவதில்லை என்றும் அவருடைய உதவியாளர் வெங்கி வேணுகோபால் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.