பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக எல் அண்ட் எனும் தனியார் நிறுவனத்தின் துறைமுகம் இயங்கி வருகிறது. இங்கு துறைமுகம் இயங்கும்போது இப்பகுதியில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்ற நிலையில், இங்கு மீனவ பகுதிகளை சேர்ந்த 1750 பேருக்கு புதிதாக அமையவிருக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக எல் அண்ட் டி துறைமுக நிறுவனம் இதுவரை 650 பேரை குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்த பணியில் அமர்த்தியது. எனினும், அவர்களின் பணி இன்றுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை.