பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலா மரங்களில் காய்பிடிப்பு அதிகரிப்பு

பந்தலூர் :  பந்தலூர், கூடலூர் வனப்பகுதிகளை ஒட்டி கிராமங்கள் அமைந்துள்ளதால் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் பாக்கு, வாழை, தென்னை, பாலா உள்ளிட்ட விவசாயங்கள் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது பலா காய்கள் சீசன் என்பதால் பல்வேறு இடங்களில் பலா மரங்கள் அதிகளவு காய் பிடித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம் அமைத்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: