டோக்கியோ : ஜப்பானுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ வருகை தந்த ஜோபிடன், இம்ப்ரியல் அரண்மனையில் ஜப்பான் மன்னர் நரூஹிட்டோவைச் சந்தித்து பேசினார். அப்போது கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழல் உக்ரைன் மீதான ரஷ்யா போர் போன்ற விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனிடையே டோக்கியோவில் திரண்ட போர் எதிர்ப்பு அமைப்பினர் அமெரிக்க அதிபர் ஜோபிடனை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.