ரஷ்யப்படைகள் முற்றுகை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை... பரபரப்பான நிமிடங்களை விவரிக்கிறார் ஒலெனா ஜெலன்ஸ்கி!!

 கீவ் : உக்ரைனில் தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படைகள் அதிபர் மாளிகையை முற்றுகையிடும் போது என்ன நடந்தது என்பதை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி உணர்ச்சி பொங்க விவரித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே சண்டை தொடங்கியதும் அது குறித்து காணொளி வெளியிட்ட ஜெலன்ஸ்கி, தன்னையும் தன் குடும்பத்தையும் ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளதாக தெரிவித்ததால் உலக மக்களின் கவனம் அவரது ஓலேனாவின் பக்கம் திரும்பியது. மத்திய உக்ரைன் நகரம் ஒன்றில் பிறந்த ஓலேனா, கல்லூரியில் உடன் படிரஷ்யப்படைகள் முற்றுகை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை... பரபரப்பான நிமிடங்களை விவரிக்கிறார் ஒலெனா ஜெலன்ஸ்கி!!

த்த ஜெலன்ஸ்கியை காதலித்து மனம் முடித்தவர்.

இருவரும் தங்கள் படித்த படிப்பிற்கு மாறாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நிலையில், ஜெலன்ஸ்கி அதிபராக பொறுப்பேற்றதால் ஓலேனாவும் அரசியல் வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். ரஷ்ய படைகள் உக்ரைனை தாக்க தொடங்கிய பிறகு, அதிபர் பின்னால் இருந்து அவரை இயக்கம் சூத்திரகாரியாக ஓலேனா வர்ணிக்கப்பட்டார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரின் இருப்பிடம் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனியார் தொலைச்சி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பிப்ரவரி 24ம் தேதி அன்று ரஷ்ய படைகள் தாம் தங்கி இருந்த மாளிகையை அதிகாலை நேரத்தில் முற்றுகையிட்டதாக கூறிய ஓலேனா, அந்த நேரம் தமக்கு ஏற்பட்ட உணர்வுகளும் மனநிலையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார். அன்பு கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் கடந்த 2.5 மாதங்களாக தனியாக இருந்த தம்மை மீண்டும் இணைந்து உணவருந்த வைத்ததற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஓலேனா நன்றி தெரிவித்தார். 45 வயதான உக்ரைன் நாட்டின் முதல் குடிமகளின் இன்ஸ்டா பக்கத்தை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

Related Stories: