மாஸ்கோ: கூடுதல் பொருளாதார தடைகளை விதித்ததால், கனடா பிரதமரின் மனைவி உள்ளிட்ட சிலர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்டோர் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ, கனடா நாட்டின் ராணுவ தளபதி எரிக் ஜீன் கென்னி மற்றும் 24 கனடா அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.