தூத்துக்குடி: தூதுக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் இந்த கோர நாளின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தூத்துக்குடின் பல்வேறு பகுதிகளில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாத்திமா நகர் பகுதில்லுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் உயிர் நீத்தவர்களின் குடும்பதினர் உயிர் இறந்தவர்களின் புகைப்படகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.