சென்னை: பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற 27ம் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தின் சார்பில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.