காட்டுப்பன்றியை தடுக்க வேலியில் பாய்ச்சிய மின்சாரம் தாக்கி 2 போலீசார் பலி-விவசாயி கைது

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு-கோழிக்கோடு சாலையில் முட்டிக்குளங்கரை பகுதியில் பாலக்காடு மாவட்ட காவலர் ஆயுதப்பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு ஹவில்தரார்களாக பணியாற்றி வந்த மோகன்தாஸ் (27), அசோகன்(31) ஆகிய இருவரையும் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. இதையடுத்து பயிற்சி பள்ளியில் பணியாற்றும் போலீசார் மாயமான இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர்.  இந்நிலையில் முட்டிக்குளங்கரை அருகே வயக்காட்டில் இருவரும் மின்சாரம் தாக்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.

 விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுப்பதற்காக விவசாயிகள் விளை நிலங்களில் உள்ள வேலிகள் மீது மின்சாரம் பாய்ச்சி உள்ளனர். இது தெரியாமல் விளைநிலங்கள் அருகே சென்ற போலீசார் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் என்ற விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த போலீசாரின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக  வைத்துள்ளனர். காட்டுப்பன்றியை கொல்ல வைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி காவலர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: