கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிருஷ்ணகிரியில், சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள முல்லை நகரில் இன்று வயது முதிர்ந்த பெண் குரங்கை நாய்கள் துரத்தி உள்ளது. வயது முதிர்ந்த குரங்கால் வேகமாக ஓட முடியவில்லை. நாய்கள், குரங்கை சுற்றி வளைத்து கடித்து குதறியது. காப்பாற்ற வந்த மற்ற குரங்குகளையும், பொதுமக்களையும் கடிக்க துரத்தியது. நாய்கள் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட வயது முதிர்ந்த குரங்கு உயிருக்கு போராடியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.