கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கி போலீசார் விரட்டி அடித்தனர். கொழும்பில் தாமரை தடாகம் முன்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தாமரை தடாகத்தில் இருந்து மாணவர்கள் பேரணியாக புறப்பட்டபோது அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.