வேகத்தடைகளில் வர்ணம் தீட்டும் பணி

தா.பழூர்: அரியலூர் மாவட்ட தா.பழூர்-கும்பகோணம் சாலையில் உள்ள வேகத்தடை உள்ளது. இதை வாகன ஓட்டிகளுக்கு காட்டும் விதமாக வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.அரியலூர் கோட்ட பொறியாளர் உத்தாண்டி அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ் ராஜ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் சாலை ஆய்வாளர் சுஜாதா மற்றும் சாலை பணியாளர்கள் மூலம் தா.பழூர்-கும்பகோணம் சாலையில் மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வரை சாலையில் உள்ள வேகத்தடை பகுதிகளில் வண்ணம் தீட்டும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள புளியமரம், வேம்பு மற்றும் மின் கம்பங்களில் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது. வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பயணத்தின்போது மரங்கள் இருப்பதை காட்டும் விதமாக இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது ஜெயங்கொண்டம்-கும்பகோணம் செல்லும் சாலையில் மதனத்தூர் கொள்ளிடம் பாலத்தின் இருபுறங்களிலும் வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: