தா.பழூர்: அரியலூர் மாவட்ட தா.பழூர்-கும்பகோணம் சாலையில் உள்ள வேகத்தடை உள்ளது. இதை வாகன ஓட்டிகளுக்கு காட்டும் விதமாக வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.அரியலூர் கோட்ட பொறியாளர் உத்தாண்டி அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ் ராஜ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் சாலை ஆய்வாளர் சுஜாதா மற்றும் சாலை பணியாளர்கள் மூலம் தா.பழூர்-கும்பகோணம் சாலையில் மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வரை சாலையில் உள்ள வேகத்தடை பகுதிகளில் வண்ணம் தீட்டும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.