கேன்ஸ்: 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலகினருடன் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசியதாவது: இந்தியாவும், பிரான்சும் தூதரக உறவுகளின் 75வது ஆண்டினைக் குறிக்கும் இந்த வேளையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக இந்தியா கவுரவத்துக்குரிய நாடு என்ற முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தற்போது ஊடகமும், பொழுதுபோக்குத் துறையும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றன.