சாம்ராஜ்நகர்: கர்நாடகா மாநிலத்தில் தேர் திருவிழாவில் இருவர் உயிரிழந்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட் என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பார்வதாம்பா எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஒரு கட்டத்தில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த தேர் அதிவேகமாக கூட்டத்திற்குள் சென்றது. இதில் ஒருவர் தேரின் சக்கரம் ஏறியதிலும், மற்றொருவர் கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.