அகர்தலா: திரிபுராவில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பிப்லாப்பின் செயல்பாட்டுக்கு திரிபுரா பாஜ.வில் கடும் எதிர்ப்பு உள்ளது. சமீபத்தில், இவரை கண்டித்து சில பாஜ எம்எல்ஏ.க்கள், காங்கிரசுக்கு தாவினர்.இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி, கடந்த வியாழக்கிழமை பிப்லாப் டெல்லிக்கு சென்றார். பாஜ தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர், திரிபுரா திரும்பிய அவர், நேற்று ஆளுநர் ஆர்யாவை சந்தித்தார். இதைத் தொடர்ந்து, தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.