கொடூர மாமியார் காலம்போய்... இப்போ கொல்லும் மருமகள்! வீடியோ வைரலால் உத்தரபிரதேச போலீஸ் அதிரடி

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு வயதான பெண், தனது மருமகளால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மருமகளை கைது செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வயதான பெண் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதையடுத்து பாதிக்கப்பட்டவரின் வீட்டை அடையாளங் கண்டு, அங்கு நேரில் ெசன்று விசாரணை நடத்தினோம்.

வயதான பெண்ணின் பெயர் ஜெய்ராம் தேவி; அவரது கணவர் பகவான்பாலியுடன் பாவ்பூரில் வசித்து வருவது தெரிந்தது. அவர்களது மருமகள் ஆர்த்தி குப்தா, கடந்த பல மாதங்களாக தனது வயதான மாமியாரை தாக்கி வருவது தெரியவந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், மாமியாரை தாக்குவதை கண்டித்துள்ளனர். ஆனால், அவர் அவர்களது பேச்சைக் கேட்காமல் மீண்டும் மீண்டும் தாக்கி வந்துள்ளார். அதையடுத்து அவர்களில் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். எனவே, மாமியாரை கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மருமகள் மீது பிரிவு 151-இன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்’ என்றார்.

Related Stories: