திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 40 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகை, 6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த புட்லூர், உல்லாச நகரை சேர்ந்தவர் தர் (32). இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக உள்ளார். நேற்று மதியம் குடும்பத்துடன் வெள்ளவேடு பகுதியில் உள்ள உறவினர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் மற்றும் 350 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளைப்போனது தெரியவந்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தர் கொடுத்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தப்படி வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: