வாஷிங்டன்: அறிவியல் வரலாற்றில் முதல் முறையாக, நிலவில் இருந்து கொண்டு வந்த மண்ணில் செடிகளை வளர்த்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கலம் தனது 11, 12 மற்றும் 17வது விண்வெளி பயணத்தின் போது, நிலவில் இருந்து பூமிக்கு அனுப்பிய மண் மாதிரிகளை கொண்டு செடிகளை வளர்க்க அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இந்த முயற்சியில் நாசா விண்வெளி மையமும் இணைந்தது. அப்பல்லோ விண்கலத்தின் 3 பயணங்களின் போதும் நிலவில் இருந்து மொத்தம் 12 கிராம் மண் மட்டுமே எடுத்து வரப்பட்டிருந்தது.
* ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள மண் மட்டுமே ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டது.