டெல்லி: இந்தியாவின் பிரதமராக 2 முறை பதவி வகித்தாலும் எதிர்காலத்தில் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதே தனது கனவு என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பரூச் பகுதி மக்களிடையே காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தம்மை சந்தித்த எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், 2 முறை பிரதமராக இருந்துவிட்டீர்கள்; இதற்கு மேல் என்ன இருக்கிறது? என கேட்டதாக தெரிவித்தார்.