ஈரோடு: தாளவாடியில் தொடர் கனமழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், ஓசூர், சிக்கள்ளி, பணக்கள்ளி, கெட்டவாடி, ஆசனூர், குளியாடா ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால், அங்குள்ள குளம், குட்டைகள் நிரம்பி உள்ளது.