நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. 16ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பும், பருவமழைக்கு பின்னரும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழையானது துவங்கவுள்ள நிலையில்,