நாக்பூர்: நாக்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பையில் வெடிபொருள் இருந்ததால், அங்கு நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. தகவல் கிடைத்ததும், ஜிஆர்பி மற்றும் ஐபிஎஃப் படையினர் அந்த பகுதிக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் 54 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நாக்பூரின் ரயில்வே அதிகாரி (மத்திய ரயில்வே) அசுதோஷ் பாண்டே கூறுகையில், ‘ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.