சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பேசுகையில், \”பூம்புகார் தொகுதி, சந்திரபாடி ஊராட்சியின் அருகில் நண்டலாற்றின் கடல் கழிமுகப் பகுதியை ஆழப்படுத்தி சிறு படகுகள் நிறுத்தும் வசதி செய்து தர அரசு முன் வருமா” என்றார். இதற்கு பதிலளித்து மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் “சந்திரபாடி கிராமத்தில் 26 விசைப்படகுகள், 274 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.