சென்னை: தடைசெய்யப்பட்ட நாடானா ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் பிடிபட்டனர். சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சஜன் (50), காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சூசை ராஜா (52) ஆகியோரின் பாஸ்போர்ட்களை சோதனையிட்டனர். அதில் இருவரும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கிவிட்டு, பின்பு சார்ஜா வழியாக இந்தியா வந்தது தெரியவந்தது.
