ஈரோடு: ஈரோடு அருகே 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை புலி துரத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்காளிக் காட்டுப்புதூரைச் சேர்ந்த அனிதா, தன் குழந்தைகள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஊஞ்சக்காட்டு வலசு அருகே புலி ஒன்று உறுமிக் கொண்டே அனிதாவின் வண்டியைத் துரத்தியுள்ளது. பதற்றத்தில் அனிதா வேகமாக வண்டி ஓட்டி தப்ப முயன்ற போது, எதிரே வந்த காரின் வெளிச்சத்தைக் கண்டு புலி காட்டிற்குள் ஓடி மறைந்தது. இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.