மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற மியூச்சுவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (வயது 28, 14வது ரேங்க்) மோதிய ஆன்ஸ் ஜெபர் (27 வயது, 10வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அபாரமாக விளையாடி ஜெபரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த பெகுலா 6-0 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஜெபர் 7-5, 0-6, 6-2 என்ற செட் கணக்கில் 1 மணி, 54 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக டபுள்யுடிஏ 1000 அந்தஸ்து தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.