டேராடூன்: ஆறு மாதங்களுக்கு பிறகு கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கான திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி குளிர்காலம் தொடங்கியதை அடுத்து உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயில் மூடப்பட்டது. இந்நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பின், கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில், பிரதமர் மோடி சார்பாக உலக மக்கள் அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டி ருத்ராபிஷேகம் நடைபெற்றது.