காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய காரில் கடத்திவரப்பட்ட ₹2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு வாலிபரை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தீவட்டிப்பட்டி ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை கார் ஒன்று விபத்தில் சிக்கியதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐக்கள் பழனிசாமி, செல்வம் மற்றும் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து நகர முடியாமல் நின்றிருந்தது. காரை மீட்ட போலீசார் சோதனை செய்தனர். அதில் 16 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 12 மூட்டைகளில் விமல் பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.