கடலூரில் காவலரை அரிவாளுடன் துரத்திய ரவுடியை பொதுமக்கள் உதவியுடன் கைது செய்த போலீஸ்

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, போலீசாரை அரிவாளுடன் விரட்டிய ரவுடி, பொதுமக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டார். நெய்வேலி அருகே கொள்ளுக்காரன்குட்டை பகுதியில், ரவுடி ஒருவன் அரிவாளுடன் காரில் செல்பவர்களை மிரட்டுவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். அரிவாளைக் கொண்ட மிரட்டிய நபர் ரவுடி வீரமணி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரிக்கச் சென்றபோது, வீரமணி அரிவாளுடன் துரத்தியதால், போலீசார் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும் போலீசாரின் இருசக்கர வாகனத்தை அரிவாளால் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரவுடி வீரமணியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தததில் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவுடி வீரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: