குன்னூர்: உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் 18 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் யானை வழித்தடத்தில், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளால் யானைகள் நடமாட சிரமமபட்டது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து மதுரை உயர் நீதி மன்றம் விசாரணைக்கு எடுத்தது.இந்நிலையில், கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பாரதிதாசன் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், யானைகள் செல்வதற்கு அதிகமாக வழிவிடும்படியும், யானைகள் கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கவும் உத்தரவிட்டது.