உடுமலை: உடுமலை நகராட்சியில் 33வது வார்டு பகுதியில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.நகர்ப்பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கும் போது, மரங்கள் இல்லாத பகுதிகளாகவும் மரங்கள் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளை வெட்டியும் விளக்குகளின் வெளிச்சம் வீதிகளில் விடும்படியும் செய்வது வழக்கம்.ஆனால் 33வது வார்டு உள்ள சௌத மலர் லே அவுட் பகுதியில் தெருவிளக்குகள் அனைத்தும் மரங்களின் இடையே அமைந்துள்ளது. அடர்ந்த மரக்கிளைகளின் காரணமாக வெளிச்சம் வீதியில் விழவே இல்லை. இதனால், அந்த வீதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவில் பெண்கள் தனியாக நடமாடுவதற்கு அச்சப்படும் சூழ்நிலை நீடிக்கிறது.