விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீன்பிடிப்பதற்காக கண்மாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாய் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பாசனத்தை நம்பி பலநூறு ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையால் கண்மாயில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாயை மீன்பிடிக்க குத்தகைக்கு எடுத்தவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கண்மாய் மதகை உடைத்து நீரை சட்டவிரோதமாக வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.