டேராடூன்: உத்தரகாண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் அக்ஷய திருதியையோட்டி நேற்று பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. இதன்மூலம், சர்தாம் யாத்திரை கோலாகலமாக தொடங்கப்பட்டது. உத்தரகாண்டில் உள்ள புகழ் பெற்ற பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு, ஆண்றுதோறும் ‘சர்தாம் யாத்திரை’ எனப்படும் புனித யாத்திரை நடத்தப்படுகிறது. இது நேற்று முதல் தொடங்கியது. இதன் முதல் கட்டமாக, அக்ஷய திருதியை முன்னிட்டு கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டன. முன்னதாக, கங்கா மற்றும் யமுனா சாமி சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் கொண்டு வரப்பட்டன.