குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக 2 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுக்கு பிறகு கோடை சீசன் நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி மே மாதம் 28 மற்றும் 29ம் தேதியில் நடைபெற உள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா முழுவதும் பொலிவுப்படுத்தப்பட்டு மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.