ஆனைமலை: கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயது நிரம்பிய பெண் அதே பகுதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், மனைவியும் பிரிந்தனர். இந்த நிலையில் அந்த பெண் பொள்ளாச்சியை சேர்ந்தவரை 2வது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு கணவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுடன் அந்த பெண் வசித்து வருகிறார்.