புதுடெல்லி: நாட்டில் வழக்கத்துக்கு மாறாக கடந்த மாதம் முதலே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. பெரும்பாலான இடங்களில் வெயில் 113 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது. இது இன்னும் 3 வாரங்களில் 125 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், `டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இது வெப்பநிலையை 96.8 டிகிரி பாரன்ஹீட் முதல் 102.2 டிகிரி பாரன்ஹீட் வரை குறைக்கும்,’ என்று வானிலை ஆய்வு மைய மூத்த ஆய்வாளர் ஆர்கே. ஜனாமணி தெரிவித்தார்.