திருவாரூர்: திருவாரூரில் கமலாலயக் குளத்தில் சுற்றுலா பயணிகளுக்காக பழுதடைந்த 2 படகுகளையும் சரிசெய்து விரைவில் படகு சவாரியை துவக்கிட வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆழி தேரோட்டத்திற்கு பின்னர் கோயில் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். தெப்பக்குளம் 5 வேலி பரப்பளவினை கொண்டது. இந்த குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி போக்குவரத்து முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின்போது துவங்கப்பட்டது. இதனையடுத்து ஆயில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகு ஒன்றும், காலால் சுற்றி செல்லும் பெடலிங் படகு ஒன்றும் என 2 படகுகள் மூலம் நகரில் உள்ள பொது மக்கள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் இந்த குளத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்து வந்தனர்.