தடை செய்யப்பட்ட ரூ.78 ஆயிரம் போதை புகையிலை பொருள் பறிமுதல்: ஒருவர் கைது-முசிறியில் போலீசார் அதிரடி

முசிறி : முசிறியில் தடை செய்யப்பட்ட ரூ.78 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.முசிறி சிலோன் காலனி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி இன்ஸ்பெக்டர் விதுன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் முருகேசன்(எ)குயின் என்ற மூன்றாம் பாலினத்தவர் வீட்டில் 50 குட்கா பண்டல்கள், 40 புகையிலை பண்டல்கள் உட்பட ரூ.78 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.இதையடுத்து போலீசார் போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை அங்கு பதுக்கி வைத்திருந்த சக்திவேல்(36) என்பவர் போலீஸ் நடவடிக்கையை அறிந்து தலைமறைவானார்.

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சக்திவேல், கரூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடித்தனர். பின்பு கரூர் சென்ற முசிறி போலீசார் சக்திவேலை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: